கிழக்கின் பாதியை கட்டி கருமேகங்கள் சூழ்ந்து கனமாக சிரித்துக் கொண்டிருந்தன, மேற்கே இருட்டு மெல்ல தொடங்கும் நேரம்
மழை இதோ இப்போ விழுந்துவிடும் என்று இருக்க அதற்குள் நாம் சென்று அடைந்து விடலாம் என்று வீட்டை நோக்கி மோட்டாரில் பயணித்து கொண்டிருந்தேன் .
மழை விழுந்தால் கொண்டு செல்லும் பொருள் உட்பட நானும் முழுமையாக நனைந்து விடுவேன் என்பதால் வேகமாக சென்று கொண்டிருந்தேன்.
நேரே செல்லும் சாலை சற்று தொலைவில் ஒரு ஆறு செல்வதால் ஒரு நீண்ட பாலம் பாலம் தொடங்குவதற்கு முன் ஒரு வேகத்தடை. பாலம் முடிந்ததும் பேருந்து நிறுத்தம் அதில் தேனீர் அருந்தி புகைத்துக் கொண்டிருக்கும் பெரிய மனிதர்கள்.
ஒரு அற்றத்தில் இருந்து பெரும் பெரும் துளிகளாக விழ தொடங்கியது கண்ணிற்கு தெரிகிறது. இங்கிருந்து பார்க்கும்போதே தெரியும் உயரிய மலைகள் அதில் நெடிய மேகங்கள்...தன்னுடைய வீட்டிற்க்கு கும்பல் கும்பலாக பறந்து செல்லும் பறவைகள். மழை விழுந்ததால் அதற்கு ஒரு கவலையும் இல்லை எந்த சலனமும் இல்லாமல் இருப்பிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்க. நானும் பயணித்தேன் ..
ஓங்கி அகல வளர்ந்த அரச மரம் இளம்பச்சை வண்ணத்தில் தன் இலைகளை சிலிர்த்துக் கொண்டிருந்தது. மழையின் கோரப் பிடியில் அரசமரம் பார்ப்பதற்கே நெஞ்சை கட்டி இழுப்பதாய் இருந்தது.
மழை உடலோடு சேர்த்து உள்ளதையும் நனைத்து விடுகிறது

No comments:
Post a Comment