Saturday, 18 June 2022

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

 அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

ஒருவரை மணம் செய்து பிறக்கும் பிள்ளைகளுடன் குடும்பத்தை ஓட்டுவதே ஒரு சவாலான விடயம். 

அதிலும் ஐந்து மனைவிமாருடன் என்றால், நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

கதிர் அறுக்கும் காலங்களில் எலிகள் தானும் வயிறாரச் சாப்பிட்டு, தன் பெண்டாட்டி பிள்ளைகளுக்கும் நிறைய உண்ணக் கொடுக்க முடியும் என்பதால், எலிகளும் அறுப்புக் காலத்தில் 5 பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ள பின்வாங்காது (அறுப்புக்கு பின்பு ஒருத்தி தன்னும் மிஞ்சுகிறாளோ என்பது கேள்விக் குறி).

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

 பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க


புகழ்,
கல்வி,
வலிமை,
வெற்றி,
நன்மக்கள்,
பொன்,
நெல்,
நல்லூழ்,
இளமை,
நுகர்ச்சி,
அறிவு,
அழகு,
பெருமை,
துணிவு,
நோயின்மை,
நீண்ட ஆயுள்
இவையனைத்தும் இல்வாழ்க்கையில் பெறத்தக்க பதினாறு பேறுகள்.

இல்லற வாழ்வில் இணைந்த பின்னரே பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன...அவற்றை சமாளிக்க என்னென்ன தேவை என்பதை கூறவே இப்பழமொழி.
.



Friday, 17 June 2022

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்

 கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்


கல்லான், அதாவது படிக்காதவனா இருந்தாலும் கணவனாயிருக்கும் தகுதி ஒருவனுக்கு இருக்கிறது. புல்லன், அதாவது கல்வி கற்றவன் (புல் என்றால் கல்வி எனவும் பொருளுண்டு) என்றாலும் அவனுக்கு புருசன் ஆகின்ற தகுதி இருக்கிறது
கணவனுக்கு உரிய அந்தஸ்த்தை மனைவியானவள் வழங்க வேண்டும் என்பது இப்பழமொழி கூறும் பாடமாகும்.

Thursday, 16 June 2022

யதார்த்தவாதி வெகுஜன விரோதி

 யதார்த்தவாதி வெகுஜன விரோதி

இன்றைய உலகில் மனசாட்சிப்படி நடப்பவனுக்கு விரோதிகளே அதிகமாவர்.
அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் பாமரர்கள் மத்தியில் வாழும் யதார்த்தவாதி(நேர்மையாளன்) ஒருவன் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக காணப்படும் செயல்களை சுட்டிக்காட்டி கண்டிப்பது இயல்பு.

யதார்த்தவாதி பிறருடைய பார்வைக்கு விரோதியாகவே தோன்றுகிறான் இருந்தபோதிலும் அறிவாளிகள்,நேர்மை மிக்கோர் மத்தியில் யதார்த்தவாதிக்கு என்றும் மதிப்புண்டு..

சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்தும்

 சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்தும்


எவ்வளவு பெரிய மனிதரானாலும்,எவ்வளவு உயரிய பொறுப்பில் இருப்பாரானாலும், தமது நிலையினின்று தாழ்ந்து விட்டாரெனில் எவரும் மதிக்கமாட்டார்கள்.
இழிந்த நிலையில்,அவருக்கும் தாழ்ந்த நிலையில்  இருப்போர்கூட சந்தர்ப்பம் அறிந்து ஏளனம் செய்ய முற்படும்...
.
.
.
.
.
.
.
.
.
.
அன்பு

குரங்கின் கைப் பூமாலைப் போல

 குரங்கின் கைப் பூமாலைப் போல



தகுதியற்றவனிடம் சேரும் ஒரு பொருள் அதனுடைய அருமை,பெருமைகளை இழந்து அழிந்து போகும் ,அதாவது அப்பொருளின் மேன்மையை தகுதியற்றவர்கள் உணருவதில்லை...
இந்த உண்மையை நாம் நம் மனதில் பதித்திட வேண்டும்

Wednesday, 15 June 2022

பாதாம்பால்

 பாதாம்பால்



தோல்விக்கு பயப்படாதவன் 
வெற்றியை கொண்டாடுகிறான்..
தோல்வியை துணிந்து வாங்குகிறவன் வெற்றியையும் துணிந்து வாங்குகிறான். 
தோல்வியும் கெத்தே...
"தோல்வியின் அடுத்தபடி வெற்றிதான்"

ஊற்றுத்தண்ணி

 ஊற்று ஓடை


கனவில் மட்டும் கைக்கு எட்டுகிறது இந்த கடந்த கால நினைவுகள்...
இந்த ஊற்றுல காலடி படாத பெண்களும் இல்ல,ஏன் ஆண்களும் இல்லனே சொல்லலாம்...
சீதப்பாலில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் நம்ம "சீதப்பால்ஊத்து"💯
வரிசை ல நின்றுக்கியலா மக்களே.....

Tuesday, 14 June 2022

முள்ளின் மேல் சீலையைப் போட்டால் மெல்ல மெல்லத்தான் எடுக்க வேண்டும்

 முள்ளின் மேல் சீலையைப் போட்டால் மெல்ல மெல்லத்தான் எடுக்க வேண்டும்❤


ஒருவரை அறிந்து கொள்ளாமல் தன்னுடைய பொருளை கொடுத்துவிட்டால் கவனமாக இருந்து மெல்ல மெல்லத்தான் அதனை மீட்டுப்பெற முயல வேண்டும் "பொறுமை"யின்றி கொடுத்த பொருளை மீட்டுப்பெற முற்பட்டால் அப்பொருள் தமக்கு திரும்பி வராமலே போகலாம்..

அவசரப்படாமல் மெல்ல மெல்ல வாங்குவதே நன்மை தரும்

திருமணம்

 திருமணம்


இன்பத்தில் இணைத்து,துன்பத்தில் தோள் கொடுத்து,கடமையில் கண்ணாயிருந்து,பிடிவாத குணங்களில் விட்டு கொடுத்து,உறவுகளுடன் ஒன்றாக கலந்து தாம்பத்திய வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து,மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி சிரிப்போடு வாழ்ந்து காட்டுங்கள்...!
🤗😍💕😋😎✌️🌾🥰🤩🥳😇🤗

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

Saturday, 11 June 2022

கறிச்சக்கை

 கறிச்சக்கை 


இந்த கறி சக்கயை கூட்டு வச்சி தின்னுறுக்கின்களா நண்பா...
தின்னுட்டு சொல்லுங்க...


நெல்லிக்காய்

 நெல்லிக்காய்


கசப்புநாலும் கஷ்டபட்டு தின்னா ஒரு நெல்லிக்காக்கு ஒரு சொட்டு வீதம் "ரத்தம்" ஊறும்

நெல்லிக்காய் கொட்டை


எதுலாம் தின்னா ஆரோக்கியமா இருக்கலாமோ அதெல்லாம் நம்ம தின்னமாட்டமே..

பாத்திரம் அறிந்து பிச்சையிடு

 பாத்திரம் அறிந்து பிச்சையிடு

ஜூன் 11/2022

நாம் கொடுக்கும் பொருளை ஒருவன் "கெட்ட வழியில் செலவிடுவானாயின்,வீண்விரயம் செய்வானாயின்" அதனால் ஏற்படும் பாவத்திற்கும்,சமூகத்திற்கு ஏற்படும் இழப்பிற்கும், அவன் மட்டுமல்ல பொருள் அளித்த நாமும் தான் காரணம்.
இனம் கண்டுகொள்ள வேண்டும் என்பதே இப்பழமொழி கூறும் அர்த்தம் ஆகும்..

Friday, 10 June 2022

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

 கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை 

ஜூன் 10



ஒரு காரியத்தில் ஈடுபடும்போது வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம். ஆனால் அக்ககாரியத்தில் ஈடுபட பயந்து பின்வாங்க கூடாது.
தனது சிந்தனைக்கு ஏற்ற ஒரு காரியத்தை சரியா தப்பா  என்று தயங்காமல் ஊஞ்சலாடுதல் கூடாது .

கூழ் குடிக்க அளப்பரிய ஆசை ஆனால் குடித்தால் மீசையில் ஒட்டிவிடுமோ என்ற கவலையும் வேறு...

பாவக்காய் வித்து

 பாவக்காய் வித்து 

இரத்த களரியா இருக்க கூடிய இந்த வித்த எல்லோரும் பாத்து இருப்பீங்க.நல்ல பழுத்த பாவக்காய பிச்சி பாத்தா முத்து முத்தாக இருக்கும்.பாக்கவே அருமையா இருக்கும் .நீங்க பாத்திருக்கிங்களா  .


Thursday, 9 June 2022

பனங்கிழங்கு

பனங்கிழங்கு


மாடு சவச்சி போட்ட பனம் பழத்த சாக்கு சாக்கா பறக்கி,கூட்டி சேத்து நல்லா 
செம்மண்ணு உள்ள எடத்துல மம்பட்டி வச்சி பாத்தி வச்சி அதுல அடுக்கடுக்கா அந்தவஅந்த பனம் பழத்த வச்சி மண்ண வச்சி மூடி மூணு மாசம் கழிச்சு தோண்டுனா இந்த பனங்கிழங்கு தங்க நெறத்துல ஜிகு ஜிகுனு புடுங்கி எடுக்கலாம்

  

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும 

ஜூன் 9/2022

இளமையில் நல்லவற்றை கற்பது, மழைக் காலத்தில் நாற்று நடுவது போன்றதாகும். மாணவப் பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்டவன், இளமைப் பருவத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியும். பருவம் தவறி விதைத்தால், பயனைப் பெற முடியாது. இளம் பருவத்தில் வேரூன்றும் பழக்கங்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். தீய பழக்கங்களும் அப்படிப்பட்டவையே.

Wednesday, 8 June 2022

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்





 காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

ஜூன் 8/2022
நெல்மணியையும்,பதரையும் காற்றுள்ள சமயத்தில் எளிதில் பிரித்துவிடலாம்.காற்று இல்லாத சந்தர்ப்பத்தில் அது கடினமாகிவிடும்

இதேபோன்று தான் சாதகமான சூழ்நிலையையும்,வாய்ப்புகளயும் தக்க சமயத்தில் பயன்படுத்தி வாழ்க்கையில் "முன்னேறி"விடவேண்டும்.இல்லை என்றால் பிற்காலத்தில் அதிர்ஷ்டம் தவறிவிட்டதே என்று  வருந்த நேரிடும்...

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

 காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

ஜூன் 8/2022

கருப்பாய் இருக்கும் தன் குஞ்சு கூட, காக்கைக்குப் பொன்னானதாகும்.
பிள்ளைகள் எப்படி இருந்தாலும் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்தவர்களே.

Tuesday, 7 June 2022

கண் கெட்ட பிறகா சூறியநமஸ்காரம்

 கண் கெட்ட பிறகா சூறியநமஸ்காரம்

ஜூன் 7/2022

நல்லவர்கள் எவ்வளவு அறிவுறுத்தியும் நல்லவற்றை ஏற்காது, நீதியை மதிக்காது, அதர்ம வழியிலே சென்று, அனைத்தையும் இழந்து, எழுந்து நடக்கமுடியாத நிலையிலே இனி நல்வழி நடப்பேன் என்று மக்கள் உறுதி எடுத்துக்கொள்ளும்பொழுது "கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்" என்று நல்லோர் கூறுவர்.

கண்டது கற்க பண்டிதனானான்

 கண்டது கற்க பண்டிதனானான்

ஜூன் 7/2022

சிலர் கண்ணால் கண்டவுடன் நுணுக்கமான விஷயங்களை எளிதில் கற்றுக் கொள்வர். சிலர் புத்தகங்களைப் படித்து அறிவினை வளர்த்து கொள்வர்.

நல்ல விஷயங்களை கண்ணால் கண்ட உடன் காலம் தாழ்த்தாமல் கற்றுக்கொள்ள வேண்டும்...

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா

 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா

ஜூன் 7/2022



எதையும் இளமையில் செய்தால் மிகவும் எளிதாகவும் வாழ்க்கை முழுதும் பயன் தருவதாகவும் அமையும்.

ஒருவனுடைய வாழ்வில் "இளமைப் பருவம்" மிக முக்கியமானது.இப்பருவத்தில் அவன் கற்று கொள்வதே வாழ்க்கை முழுவதும் தொடரும்.

இளமையில் "தீய" பழக்கங்களை பழகி விட்டால் முதுமையில் அகற்றுவது "முடியாத" செயலாகிவிடும்.


Monday, 6 June 2022

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

ஜூன் 6/2022


 மனிதனின் மிகப் பெரிய பலவீனம் "தோற்றத்தை" வைத்து ஏமாறுவது

நாம் மனிதர்களின் புறத்தோற்றத்தை வைத்து அவர்களின் உள் "மனதை" அல்லது உண்மையான "குணத்தை" எடைபோட முடியாது 

அதற்கு உதாரணமாக தங்கத்தை கூறியுள்ளனர்

பதறாத காரியம் சிதறாது

பதறாத காரியம் சிதறாது 




ஜூன் 6/2022


எதிலும் நிதானம் வேண்டும். செய்ய வேண்டிய எந்தக் கருமத்தையும், பதற்றமின்றி, திட்டமிட்டு செய்யும்போது, அந்தச் செயலை எந்தத் தவறுமின்றி நேர்த்தியாக செய்து முடிக்க இயலும்..

Sunday, 5 June 2022

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு

ஜூன் 6/2022

 நாம் எதைச் செய்தாலும் அளவறிந்து செய்ய வேண்டும். சிக்கனமாக இருக்க வேண்டும். வீண் செலவு செய்யக்கூடாது

நாம் எதைச் செய்தாலும் நிதானித்து, ஆர அமரச் சிந்தித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இப் பழமொழி நமக்குக் கற்பிக்கிறது. தேவையற்ற பொருள்களைக் கழிக்கும் போது கூட, சிந்தித்துத்தான் செயல்பட வேண்டும் 

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே

ஜூன் 5)2022

கன்னம் என்பது நமது முகத்தில் இருக்கும் கன்னம் அல்ல.

அந்தக் காலத்தில் திருடர்கள் "கன்னக்கோல்" என்ற ஒரு ஆயுதத்தின் உதவியால் ஒரு வீட்டின் சுவற்றில் துளை போட்டு அதன் வழியே உள்ளே சென்று திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள் .

அதனைத் தான் நம் பெரியவர்கள் தொழிலில் எவ்வளவு பெரிய பொருள் இழப்பு நேரிட்டு ஒருவன் ஏழையானாலும் சரி,

அடுத்தவர்களின் பொருளை அவன் திருடிவிடக்கூடாது என்று சொல்வதற்காக

'கன்னக் கோல் என்ற ஆயுதத்தில் கை வைக்கக் கூடாது என்பதற்காக

சுருக்கமாக கன்னம் என்று சொல்லி வைத்தார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும்

ஜூன் 5/2022


 வயலில் நெல் பயிரிட்டு ராப்பகலாய் பாடுபடும் விவசாயி அதன் "விளைவை" மகிழ்வுடன் கொண்டாடும் காலம் "தை" மாதமாகும்

ஆடி மாதம் துவங்கி ஆறு மாதத்திற்கு நெற்பயிர் வளர ஆரம்பித்து "தை" மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும்.



இந்த ஆறு மாதமும் விவசாயிகள் தான்பட்ட கடன், துன்பம், கவலைகள் எல்லாம் தீர்ந்து அறுவடை செய்து பணம் ஈட்டி துன்பங்களை தீர்த்துகொள்கின்றனர்
 
தை மாதத்தை தமிழர்கள் உற்சாகமாக வரவேற்பார்கள்.


தை பிறந்தால் வழி பிறக்கும்.

Saturday, 4 June 2022

அவசரக் காரனுக்கு புத்தி மட்டு

அவசரக் காரனுக்கு புத்தி மட்டு 

ஜூன் 5/2022

எதெர்க்கெடுத்தாலும் அவசரம்....!
நிதானத்தை இழந்த அவசரக்காரர்களே அதிகம் இந்த இயந்திர உலகில்..

தகுந்த தயாரிப்பு இல்லாமல்,பொறுப்பில்லாமல் ஒரு செயலை செய்து முடிக்க முயன்றால் பரபரப்பு, நிதானமின்மை, தானாகவே ஏற்படும்.
அவசரம் நம் புத்தி(அறிவை) சிந்திக்க விடுவதில்லை...

செய்யும் செயலுக்கு நேரத்தை செலவிடுங்கள்..

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

 ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

ஜூன் 4/2022



ஆனைக்கு = ஆ+நெய்


"ஆ"பசுவின் பாலில் இருந்து கிடைக்கும் நெய் உணவு செரிமானம் அதிகம் உள்ள இளமைப் பருவத்திலும்

பூனைக்கு = பூ+நெய்



"பூ"விலிருந்து கிடைக்கும் தேனை(நெய்) உணவு செரிமானம் குறைவாக உள்ள முதுமை பருவத்தில் மருத்துவ குணமுடைய  உட்கொள்வதை குறிப்பிட கூறப்பட்ட பழமொழி .

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்💕.

வெற்றி பெற யானை பலம் வேண்டாம் நண்பர்களே ஊக்கமான உள்ளங்கள் போதும் வெற்றி நம் வசமே



Friday, 3 June 2022

ஆழம் தெரியாமல் காலை விடாதே

 ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஜூன் 3/2022


ஆற்றிலோ குளத்திலோ நாம் இறங்குமுன் அதன் ஆழத்தை தெரிந்துகொண்டு பின்னர் இறங்கவேண்டும்.இல்லை என்றால் இறக்க நேரிடும்..
அதுபோல ஒரு செயலை செய்யுமுன்னே அதற்கு தேவையான ஆற்றல் திறமை அதன் விளைவுகள் தெரிந்து செய்ய வேண்டும்..
செயல் இடையில் நின்றால் அவதியுற நேரிடும்

Thursday, 2 June 2022

ஆடத் தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்

 ஆடத் தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம் 

ஜூன் 3/2022


ஆடத் தெரியாத சிலுக்கு கால்ல சுளுக்குனுச்சாம்..

எதையும் “கோணல் பார்வையுடன்” பார்ப்பவருக்குததான் இந்தப் பழமொழி.
வித்தை தெரிந்தவருக்கு அறையோ , அரங்கமோ என்ற பேதமில்லை. எங்கும் ஆடுவார். எதிலும் ஆடுவார். சாக்குப் போக்கு, நொண்டிச் சாட்டுகள் இவரிடம் கிடையாது.

A bad work man blames his tools என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

தொழில் தெரியாதவன் தன் பிழைகளுக்கான காரணத்தை தான் உபயோகித்த ஆயுதங்கள் மீது சுமத்தி விடுவானாம்.

“ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தை குறை சொல்வான்.”

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்

 ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்

ஜூன் 2/2022


ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்" என்பதன் சரியான விளக்கம் என்ன?


ஆடும் ஓநாயும் நண்பர்களல்ல அவரவர் துக்கங்களில் பங்குபற்றிக் கொள்ள!


ஓநாய்க்கு ஆடு சாப்பிடக் கிடைத்தால் சந்தோஷம். அது நனைந்தால் என்ன, வெயிலில் நின்றாலென்ன? ஓநாய்க்கு தேவை மாமிசந்தான்...




மனிதர்களுள் இப்படிப் பலர் இருக்கிறார்கள். பிறருக்கு கேடு வராமல் பாதுகாப்பது போல் நடிப்பார்கள். போலி அனுதாபமும் நடிப்பும், உண்மையில் கெடுத்து அழிப்பதற்காகவே இருக்கும்.


இது நம்முள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பழமொழி! அனுதாபம் காட்டுகிறார்களே, அன்பாகப் பழகுகிறார்களே என்று கருதி ஏமாந்து விடக் கூடாது


ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்

 ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

ஜூன் 2/2022



ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுதான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்றாகி விட்டது..

நம் நாட்டில் சித்த வைத்தியம் தான் சிறப்பாகவும்,சீராகவும் இருந்து வந்தது.சித்த வைத்தியர்களை மனதில் வைத்து சொல்லப்பட்ட பழமொழி இது.

வைத்தியன் என்பவர் குறைந்தபட்சம் 50,000 வேர், செடி, கொடிகளை எடுத்து இலைகளைப் பறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதுபோல, குறை‌ந்தப‌ட்ச‌ம் ஆயிரம் வேரையாவது கொன்றிருந்தால்தா‌ன் அரை வைத்தியனாகவாவது ஆகியிருக்க முடியும்


Wednesday, 1 June 2022

ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே

ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே

ஜூன் 2/2022


மரங்களின் பயன்பாடுகளில் ஒன்று அவைதரும் பழங்களாகும்.பழம் தரும் மரங்களையே அனைவரும் விரும்புவர்.பறவைகள் அம்மரத்தில் உள்ள பழங்களை உண்டு பின்னர் வேறு பழம் உள்ள மரங்களை நாடிச்செல்லும்.இது அனுபவப் பூர்வமாக நாம் அன்றாடம் காணும் காட்சியாகும்.ஆலமரம் பழுத்தால் அதனை நாடிச்செல்லும் பறவைகள் ,அரசமரம் பழுத்ததும் அதனை நாடிச்செல்கின்றனவாம்

இதுபோன்று ஒருவன் செல்வ செழிப்புடன், மிக்க வசதி வாய்ப்புடன் இருக்கும் போது சில நண்பர்களும்,உறவினர்களும் வலிய சென்று உறவாடுவர்.அவனது பெருமைகளை பேசி நன்மைகளை பெறுவர்.
அவன் செல்வம் குன்றி வறுமை அடைகிறான் எனில் அவனை விட்டு விலகி வேறு செல்வந்தர்களை தேடி செல்வர்

இந்த உலக வழக்கையே "ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே"
எனும் பழமொழி நமக்கு நன்குணர்த்துகிறது...


அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி

 அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி

மே 2/2022


உறவு இல்லை என்றாலும் உரிமை உண்டு.

வான் முட்டும் பாரம் ஆயினும் அசாதாரணமாக சுமக்க முடியும் நட்பு மட்டும் உடன் இருந்தால்

"நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம் 
நல்ல ஆட்சியாளனை அழிவு காலத்தில் அறியலாம்."

நமக்கு அநேகம் பேர் நண்பர்களாக இருக்கலாம்
அவர்கள் அனைவரும் உண்மையான நண்பர்கள் என கூறி விட முடியாது .

சிரித்து சிரித்து பரிவாக பேசி கூடவே இருந்தாலும் நம் வீழ்ச்சிக்கு ஆர்வமாக காத்திருக்கும் நண்பர்களுக்கு மத்தியில்,
நாம் கூனிக் குறுகி, மனம் உடைந்து,தைரியம் இழந்து,சோர்ந்து,பிறர் முகம் பயந்து ஒழியும் போதும், உறுதி ஊட்டும் உற்சாக வார்த்தைகளால் மனதினை உசுப்பி ,எழுச்சி தருவது மட்டும் இல்லாமல்,என்னையும்,என் சூழ்நிலையையும் புரிந்துகொண்டு உடனிருக்கும் நட்பு கிடைப்பது அபூர்வமே...

‌நமக்கு ஒரு துன்பம் ஏற்படும் போது உண்மையான சிநேகிதனை எதார்த்தமாக தெரிந்து கொள்ளலாம்.....



அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

 அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

ஜூன்1/2022




அடம்பன் என்பது கடற்கரையில் காணப்படும் ஒரு வலுவிழந்த கொடி வகையாகும்.. கால்விரல்களில் பிடிபட்டால் கூட உடைந்துவிடும்

மிகவும் பலவீனமான கொடி கூட ஒன்றாகக் கட்டப்பட்டால் பலமானதாகிவிடும்.
எளிதில் அறுத்துவிட முடியாது...காரணம் அவை ஒன்றாக சேர்ந்துருப்பதாலேயே...

போட்டியும் பொறாமையும் நிறைந்த இன்றைய உலகில் மனிதன் தனித்து வாழமுடியாது ..ஒரு தனிமனிதனை மற்றொரு தனிமனிதன் எளிதில் வென்றுவிடலாம்.பல பேருடன் "ஒற்றுமை"யாக சேர்ந்து நின்றால் அவனை வெற்றி கொள்ளல் எளிதல்ல...

ஒற்றுமையே பலம் என்ற உண்மையே உணர்த்தும் இப்பழமொழியைய் நாம் அனைவரும் தம் வாழ்க்கையில் பயன்படுத்தி நன்மை பெறவேண்டும்....

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...