Tuesday, 31 May 2022

அரசனை நம்பி புருசனைக் கைவிடாதே

 அரசனை நம்பி புருசனைக் கைவிடாதே

ஜூன் 1/2022



அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்ன?

உண்மையான பழமொழி என்னவென்றால் "அரசினை நம்பி புருஷனை கைவிட்ட கதை".

இங்கு அரசு என்பது அரசமரத்தை குறிக்கும். அதிக அளவில் தூய பிராண வாயுவை வெளியிடுவதால் அரச மரத்தை சுற்றினாலோ, அதனருகில் தினம்தோறும் இருந்தாலோ பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதற்காக புருஷன் (கணவன்) இல்லாமல் குழந்தை பிறக்குமா என்ன. அது போல, நம் வேலைக்கு ஒரு சில காரணிகள் துணையாக இருக்கலாம். ஆனால், நாம் செய்யவேண்டியதை செய்யாமல் போனால் அவை பயன்படா.

இதைக் குறிக்க வந்ததே இந்த பழமொழி.

அழுத பிள்ளை பால் குடிக்கும்

 அழுத பிள்ளை பால் குடிக்கும்

மே 31/2022



பால் கொடுப்பது பெற்ற தாயின் கடமை.
தாயானவளிடம்,குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்று நினைவூட்ட அவசியமில்லை..
கு
அழாமல் இருந்தால் அதன் பசி தீருமா...?அல்லது அழுகையின் மூலம் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறதா...!!!

"அழுத பிள்ளைக்கு தாய் பால் கொடுப்பாள்" என்று இந்த பழமொழி கூறவில்லை..பிள்ளைக்கு பால் தேவை என்றால் இயற்கையாக கிடைக்காத பட்சத்தில் அழுதாவது அதனைப் பெற்றிட வேண்டும் என குழந்தை நினைக்கிறது,அதற்காக முயற்சிக்கிறது...

அதுபோல

நமது நியாயமான உரிமைகள் நமக்கு கிடைக்காத பட்சத்தில் அதனை கேட்டாவது (அ) போராடியாவது பெற்றிடவேண்டும் என்று இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது....

Monday, 30 May 2022

பழுத்த ஓலையைப்பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்

பழுத்த ஓலையைப்பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்

மே 30/2022


பழ இலையை பார்த்து பச்சை இலை சிரிக்கிறது...

காற்றடித்தால் விழுந்து விடும் காய்ந்த பனை ஓலையின் பரிதாப நிலையை பார்த்து, பச்சை ஓலை சிரிக்கிறது.
அதன் இளமையும் பசுமையும் அந்த நய்யாண்டி சிரிப்பில் தெரிகிறது..
பழுத்து தொங்கும் ஓலையும் ஒரு நாள் குருத்தோலை யாக இருந்தது தான்...

பிறரின் வீழ்ச்சியில் நாம் சிரிக்கும் போது  நமக்கும் அக்கதி ஒரு நாள் வரும் என்பதை மறந்து விடுகின்றோம்.

மூப்பு என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்று,முதுமையும் தள்ளாமையும் என்றோ ஒரு நாள் நமக்கும் வந்தே தீரும்..

மூதவர்களுக்கு மரியாதை செய்வோம்..
தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை ஏளனம் செய்யாமல் இருப்போம்..

Sunday, 29 May 2022

சிறு துளி பெருவெள்ளம்

 சிறு துளி பெருவெள்ளம்

மே 30/2022

“தண்ணீரின் அருமை கோடையில் தெரிவது போல” சேமிப்பின் அருமையானது வறுமை வரும் போது நன்றாகவே தெரியும்.
ஒரு மனிதன் வாழ்வில் வெற்றியடைய நல்லறிவுடையவனாகவும் அதே நேரம் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.

கல்வியாகட்டும் செல்வமாகட்டும் சிறுக சிறுக சேர்ப்பதனாலேயே முழுமையான மற்றும் நிலையான அடைவினை அடைந்து கொள்ள முடியும்.
உலகத்தின் எல்லா வித வெற்றிகளுக்கும் ஆரம்ப புள்ளி மிக சிறிய முயற்சியாக தான் இருக்கும்.

கண்ணுக்கு தெரியாத சிறிய துகள் விதையில் இருந்து பலநூறு பேர் ஓய்வெடுக்கும் ஒரு ஆலமரம் உருவாகின்றதனை போல

சிறிய தீப்பொறி பெரும் காட்டினையே எரிப்பதனை போல சிறிய ஒரு துளி நீர் தான் காட்டாற்று வெள்ளமாக பேராறுகளாய் பிரவகிக்கின்றன.

இது நமக்கு மிகப்பெரிய உண்மை ஒன்றை உணர்த்துகிறது. நாம் சிறுக சிறுக சேமிப்பதனால் தான் தான் அது எம்மை பெரும் வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்.




அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

மே 29/2022


நம்முடைய உள்ள உணர்ச்சிகளை கண்ணாடி போல காட்டுவது நம் முகமே..

ஒப்பனையால் ஒருவர் அழகாகி விட முடியாது. உள்ளத்தூய்மையால்  மட்டுமே ஒருவர் நேசிக்கின்ற - விரும்புகின்ற தூய்மையை  பெற முடியும்...ஒருவரது மனநிலையை அவரது முகத்தைக் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். மனிதருக்கு முகபானைகள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும் என்பது இதன் விளக்கம் ஆகும்.


கவலை இல்லாத மனிதன் மிக குறைவு..கவலைகளை கடந்து நம் அருகில் இருப்பவர்களிடம் சிரித்து மகிழ்வோம் நம் கவலை நமக்கு வேண்டியவர்களுக்கும் கவலையை உண்டாக்கிவிடக் கூடாது...



Monday, 23 May 2022

பட்டம் தவறினால் நட்டம்

 பட்டம் தவறினால் நட்டம்

மே - 23/2022


பட்டம் தவறினால் நட்டம்..
கருத்து :பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை. பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம்.

 பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் தான் 'பட்டம் தவறினால் நட்டம்' என்ற பழமொழி வந்தது.

 தமிழ் மாதங்களை கணக்கிட்டு அந்தந்த பட்டத்துக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்வார்கள். தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கும் காலம் என்பதால் புரட்டாசி பட்டம் சிறப்பு பெறுகின்றது. 

புரட்டாசி பட்டத்தில் கத்தரி, கீரை, முள்ளங்கி , பூசணி, முருங்கை, பீர்க்கன், சிறு தானியங்கள் பயிரிடுவர்.


Sunday, 22 May 2022

விளையும் பயிர் முளையிலே தெரியும்

விளையும் பயிர் முளையிலே தெரியும்

மே - 22/2022


 
மக்கள் இளமையிலேயே திறனுடன் செயல்பட்டு அறிவாற்றலுன் முன்னேற வேண்டும் என்பதை கூறும் பழமொழி...


சில காய்கள் பிஞ்சிலேயே பழுத்து பயனற்று போவதுண்டு.,
பயிர் முளையிலேயே செழுமை பெறவில்லை எனில்,பிறகு முற்றி முதிர்ந்து மேனி கண்டு விளைச்சல் தருவது எவ்வாறு...?
ஓர் இளைஞர் இளமையில் செயல் ஆற்றுவதைக் கொண்டு இவர் முன்னுக்கு வருவார்,இவர் உருப்படமாட்டார் எனத் தெரிந்துகொள்ளலாம்....

உழவு செய்ய வேண்டிய காலத்தில் ஊர் சுற்றிவிட்டு,அறுவடை காலத்தில் அரிவாள் எடுத்துக் கொண்டு போனால் எதை அறுவடை செய்வது...?இது மக்களின் உழைப்பு அல்லது சோம்பல் நிலைக்கும் பொருந்தும் ..

இளமையில் உழைக்காமல் ஊர் சுற்றியவர்கள் பின்னர் எதிர்பாரா விதமாய் பெரிய அளவில் முன்னேறியதும் உண்டு....இது சிறுபான்மையே..? இளமையில் ஊக்கம் காட்டாதவர்கள் பின்னர் முன்னேறாமையும்,இளமையில் ஊக்கம் காட்டியவர்கள் பின்னர் முன்னேறியதுமே தான்  பெரும்பான்மையான நிலைமை....

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் விளையுமா"

Saturday, 21 May 2022

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

மே-21/2022


இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை..!


ஆற்றின் ஒரு கரையில் மேயும் மாட்டுக்கு அங்குள்ள புல்லை விட ,ஆற்றின் மறுகரையில் உள்ள புல் பச்சை பசேல் எனவும்,அடர்த்தி நிறைந்ததாகவும் காணப்படுமாம்...அங்கே போய் மேய்ந்தால் என்ன என்று தோன்றுமாம்

அங்கேயும் இதே போல தான் உள்ளது என்று,சென்று பார்த்தால் தான் தெரியும் ...


கருத்து : நிம்மதி தேடி அலையும் நாமும் ஒரு இக்கட்டான சூழ்நிலையோ, மனதில் பாரமோ நேரும் பொழுது, சுற்றி இருப்பவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நம் மனதை மேலும் அழுத்தத்துக்கு ஆளாக்குவோம் ...!


"வீட்டுக்கு வீடு வாசற்படி"


நல்ல சிந்தனை நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும்...💕🤗

 

Friday, 20 May 2022

ஆறிலுஞ்சாவு நூறிலுஞ் சாவு

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு

மே -20/2022

அன்புடன்

ஆறிலும் சாவு நூறிலும் சாவு..
இப்பழமொழிக்கு மஹாபாரத புராணக்கதையை விளக்கமாக சொல்லுவார்கள்...

மகாபாரதத்தில் குந்திதேவி கர்ணனை பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து கௌரவர்களை எதிர்த்து போரிட சொல்வார்...

அதற்கு கர்ணன், 5 தம்பிகளுடன்  இணைந்து ஆறில் ஒருவனாக போரிட்டாலும்  சாக தான் போகிறேன்....

கௌரவர்கள் 100 பேருடன் இணைந்து போரிட்டாலும் நான் சாகத்தான் போகிறேன்

அப்படி இருக்க செஞ்சோற்று கடன் தீர்க்க கௌரவர்கள் பக்கம் நின்று போரிடுவதே என் விருப்பம் என்பார்
6-லும் சாவு(பாண்டவர்களுடன் ஆறாவது ஆளாக சேர்ந்தாலும் சாவு)
100-லும் சாவு(கௌரவர்களுன் இணைந்தாலும் சாவு)




 

புலி பசிச்சாலும் பிள்ளையை தின்னாது..

 புலி பசிச்சாலும் பிள்ளையை தின்னாது

மே - 20/2022

மிகப் பழமையான பழமொழி என்பதால் நாம் அன்றாடம் பேசும் சொல்வழக்கில்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது ...என்றாகி விட்டது..

 இந்த பழமொழியின் உண்மையான பொருள் என்னதான் என்று பார்ப்போம்.....?

புலி பசித்தாலும் பிள்ளையை தின்னாது என்பது தான் சரியான சொலவடை...

பொதுவாக ஊண் உண்ணும் விலங்குகள் தன்னுடைய குட்டிகளை ஈனும் போது மிகப்பசியாக இருக்கும்...அப்போது தன்னுடைய முதல் குட்டியை தின்றுவிடும்.
இது நம் வீட்டு விலங்குகளுக்கும் பொருந்தும்...
குறிப்பாக காட்டு விலங்குகள்.....
இதில் புலி சற்று மாறுபட்ட விலங்கு

புலி எவ்வளுவு தான் கடும்பசியில் வாடினாலும் தன்னுடைய குட்டிகளை தின்பதில்லை...இந்த பழக்கத்தை சிறப்பாக கூறும் பொருட்டே "புலி பசித்தாலும். பிள்ளையை தின்னாது" என்றானது...

தாவர உண்ணிகள் தன்னுடைய குட்டிகளை உண்ணுவதில்லை..
(யானை ,முயல்,பசு)
முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் பறவைகளும்,
பாம்பு வகைகளும் 
தன்னுடைய குட்டிகளை தின்பதில்லை ..!
நன்றி ..!!!


Thursday, 19 May 2022

எறும்பு ஊர கல்லும் தேயும்

 எறும்பு ஊர ஊர கல்லும் தேயும்...

மே-19/2022


அன்புடன்

எறும்பு ஊரக் கல்லும் தேயும்..
என்பது பழமொழி

அப்படி இதன் பொருள் தான் என்ன....?

எறும்பை கவனித்திருப்பீர்கள், பார்ப்பதற்க்கு மிக சிறியதாக இருக்கும் சுறு சுறுப்புக்கு முதல் எடுத்துக்காட்டு எறும்பு தான்..

கல் எவ்வளவு கடினமானது னு தெரியும் 
எரும்பின் பாதையில உள்ள கல்லு எவ்வளவு தான் கடினமா இருந்தாலும் இந்த மென்மையான எறும்பு ஊர ஊர கடினமான கல்லும் தேய்ந்து  போய்ரும்...

வீம்போ, விசும்போ நம்மில் சிலபேரும் அப்படிதான்...
ஒரு இலக்க அடைய நம்ம எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சியும் தோல்வியா போய் முடிஞ்ஞாலும் அந்த இலக்க அடையிற வர நாம எடுக்குற முயர்ச்சிய கை விடாம இருக்கணும் ...

முயர்ச்சிய கை விடாத நண்பா...


ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

வணக்கம்



அன்பு

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்..
நாம் அடிக்கடி கேட்கும் பழமொழிகளில் இதுவும் ஒன்று
இதன் பொருள் தான் என்ன...?
நாம் அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு - ஊராரின் பிள்ளைகளுக்கு நல்ல உணவளித்து, அன்புகாட்டி,கருணையுடன் நன்மை செய்து வந்தால் ,நம் பிள்ளைகளுக்கு அந்த இறைவன் துணைநிர்ப்பான் என்பதே இதன் பொருள் ஆகும்.
"பிறர் பிள்ளை தலை தடவ தன் பிள்ளை தானே வளரும்"
என்ற முதுமொழியும் இதற்கு உண்டு..

ஆனால் இக்காலத்தவர்கள்
தன் வீட்டுக்கு வந்த இன்னோர் வீட்டு பெண்ணான மருமகளை (ஊரார் வீட்டுப்பிள்ளை) நல்ல முறையில் மதிப்பளித்து,உணவளித்து,ஆதரித்து வந்தால் அவள் வயிற்றில் வளரும் தன் வீட்டுப்பில்லை (நம் வீட்டு வாரிசு) நல்ல முறையில் வளரும் என்பதே இப்பழமொழி கூறும் விளக்கம் என்று கூறுகின்றனர்..

இப்பழமொழி கூறும் அர்த்தம் ஏதுவாக இருந்தாலும் தன்வீட்டுப் பிள்ளை ஊரார் வீட்டுப் பிள்ளை என பேதம் பாராட்டாது,அனைத்து பிள்ளைகளிடமும் அன்பு காட்டி வாழ வேண்டும்....

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்...

 அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்...

 அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.


உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்..


பயம் எனும் பேய்தனை அடித்தோம்,
பொய்மைப் பாம்பை பிளந்துயிரைக் குடித்தோம்..
                                                                - பாரதி

கொத்திருட்டு ல நம்ம தனியா  நடந்து போனா உனக்கு துணை நான்,எனக்கு துணை நீ னனு சொல்லி போய்ட்டு சுதந்திரமா வந்துரலாம்...
தனியா போனா ஆண்டவனே துணை ன்னு போய்ட்டு வருவோம் ..

நம்ம எப்பிடி தான் தைரியமே துணை ன்னு போனாலும்...இருட்ட கண்டு பயப்படாத நாள் உண்டுமா,ஆள் தான் உண்டுமா.?


பயம் வந்து தீரவே....! நம்ம பாக்குறது,சிந்திக்கிறது ஏன் நம்ம..என்ன செஞ்சாலும் அந்த பயம் தான் நம்மள ஆட்டிப் படைக்கும்...

நிழல கூட பாத்து பயந்து "பேயி" தா நம்மள துரத்துதுனு பயந்து மயங்குறவங்க அதிகம்பேர்

ஒரு கயிற மிதிச்சாலும் பாம்ப தான்



மிதிச்சிட்டோம்னு நினைக்கிறோம்..

சின்ன முள்ளு குத்துனா கூட தேள் கொட்டிட்டோனு பயப்படுறோம்..

அறியாமை ல இருந்து நம்மவெநம்ம வரக்குடிய நாள் பயம் நம்மள விட்டு காணாம போய் இருக்கும்

பயத்துல இருந்து வெளிய வரணும் னா அந்த பயத்துக்க ஊடா தான் செல்லனும் .

அன்புடன்
அ.சனநித்

Wednesday, 18 May 2022

ரசனையின் தொடக்கம் தான் என்னுடைய முதல் படி...

    ரசிக்கப்பழகு 
❤💗

ரசிகனாக இரு தவறில்லை ஆனால் ,என்றும் உனக்கான ரசிகர்களை உருவாக்க தவறி விடாதே....
எத்தனை நாள் தான் நாமும் பின் தொடர்பாளராக இருப்பது,என்பதில் தொடங்குகிறது இந்த சகாப்தம்..

பார்வையும் சிந்தனையும் வேறுபடும் போது ஆக்கம் உருப்பெருகிறது..

காலத்தின் வேகம் அனல் பறக்கிறது
இந்த காலச் சக்கரத்தில நமக்கான தடத்தினை அழுத்தமாக பதிவிட்டு செல்ல ஆசப்படுவதால் இந்த பதிவு..
ஒவ்வொருவரும் தனக்கான தடத்தினை பதிக்க வேண்டும்..

நம் வாழ்க்கையில் எது எடுத்தாலும் மிகச்சிறந்ததை,சிறந்த ஒன்றை அடைய ஆசைப் படுகிறோம்
அதற்கு ஏற்றவாறு நாமும் சிறந்தவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும்..

கர்ப்போம் கர்ப்பிபோம் 

கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு...

சிறிய விசயங்களில் சிறந்தவனாக இருப்பவன்
பெரிய பொறுப்புகளில் சிறந்து விளங்குவான்
ரசிக்கப் பழகுவோம்
ரசிக்க வைப்போம்
என்றும் அன்புடன் சசீதப்பால் எனும் கிராமத்திலிருந்து...🌴


அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...