வருடாந்திர கடன் வாங்கிய விவசாயி ஆண்டு இருதியில் தான் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் வட்டி போட்டு வசூல் செய்வது வங்கியின் ஆண்டாண்டு கால நியதி..அப்படி தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது .
நாள் நெருங்கும்போது வங்கியில் இருந்து ஒரு விண்ணப்பம் செல்கிறது..
தாங்கள் வாங்கிய பணத்தை உரிய தியதிக்குள் திரும்ப செலுத்துங்கள் என்று...
விவசாயியும் படிக்கிறார்,நாள் நெருங்குவது கடனை வாங்கிய விவசாயிக்கு தெரியாமலா இருக்கும்
அவரும் திரும்ப செலுத்தும் மனநிலையில் தான் உள்ளார்... பாதிக்கு அதிகம் பேர் யாரும் தன்னை கை நீட்டி கேள்வி கேட்கும் படி ஆகிவிட கூடாது எனும் மனநிலையில் உள்ளவர்கள் தான் (குறிப்பாக அந்த காலத்து வார்த்தையே வாக்கு என்று வாழ்ந்தவர்கள்)
இப்பொழுது அந்த மனநிலை குறைவு தானே..
உழைத்து சேமித்த பணத்தை மனைவி கொடுக்க தன்னுடைய சைக்கிளில் 2 கிலோ மீட்டர் மிதித்து பணத்தை உரிய வங்கியில் சேர்க்கிறார் .
பணம் பெறுபவர் 500 ரூபாய் தாள்கள் 200 ரூபாய் 100 ரூபாய் தாள்கள் 50 ரூபாய் தாள்கள் 20 ,10 ரூபாய் தாள்கள் என்று பணம் என்னும் இயந்திரத்தில் போட்டு எண்ணி கடிதத்தில் எழுதி கூட்டி பார்க்கிறார்..
எண்ணி பார்த்து விவசாயியை பார்க்கிறார் பணம் எண்ணுபவரின் முகத்தில் ஒரு பதட்டம் தெரிகிறது மறுபடியும் நிதானமாக கூட்டுகிரார் ,விவசாயியை பார்க்கிறார் அதே பதட்டம் அங்கும் இங்கும் பார்க்கிறார்
பணம் அடைத்து விட்டதாக உள்ள ரசீதை சீல் வைத்து சிரித்த முகத்தோடு குடுத்து அனுப்புகிறார் .
விவசாயியின் முகத்தில் ஒரு ஆனந்தம் தெரிகிறது.நாம் உழைத்து கடனை கட்டி விட்டோம்.இனி நிம்மதியாக இருக்காலாம்..கடன் இல்லா வாழ்க்கை நிம்மதி தானே...
மறுபடியும் தன்னுடைய சைக்கிளை எடுக்கிறார்..நிதானமாக நிம்மதியாக தன்னுடைய வண்டியில் வீடு செல்கிறார்..மனைவியின் முகத்தில ஒரு பதட்டம் ...
ஏன் அந்த பதட்டம்...?
விவசாயி திகைக்கிறார்....!
தான் கொடுத்த பணத்தில் அதிகமாக 5000 ரூபாய் பணம் இருந்ததாக அடித்து சொல்கிறார்...
விவசாயிக்கு மூச்சே நின்றுவிடும் போல பதட்டமடைகிரார்...!;
மிதிவண்டி பறக்கிறது,இதயம் அடிக்கிறது வியர்வை தெரிகிறது...
வெயிலில் பயணம்...விவசாயியின் மனதில் பயம் குடி கொள்கிறது...
இனி சென்று எப்படி பேசுவது,
உழைத்த பணம் 1 ரூபாய் என்றாலும் தன் கையை விட்டு உண்ணாமல் தொலைத்தால் வலி உயில் போகும்(களவாடல் செய்த பணம் பறி போனாலே கடினம்தான்)
கிடைக்குமா கிடைக்காதா...!
எண்ணி குடுக்காதது நம் தவறு ..;
விவசாயியின் மனது ஓடுகிறது எண்ணும் போது பணம் வாங்கியவரின்முகத்தில் இல்லாத பதட்டம் எண்ணி முடித்த பிறகு வந்தது ...
கண்டிப்பாக ஏதோ தவறு உள்ளது ...!
எப்படி கேப்பது என்ன சொல்வார்...
செல்கிறார்..
உள்ளே நுழைந்த உடன் முகமும் முகமும் சந்திகிறது....
பார்த்த உடன் மலுப்பலாக பேசி பணத்தை திரும்ப கொடுக்கிறார்...
நீங்கள் சென்ற பிறகுதான் பார்த்ததாக ஊழியர் சொல்கிறார்...
கிடைத்து விட வேண்டும் என்று சென்ற பெரியவர் எந்த பதிலும் பேசாமல் புன்னகைத்தவாறே வாங்கிக்கொண்டு வெளியில் செல்கிறார்...
{இதே பணத்தை செலுத்தும் போது 100 ரூபாய் குறைவாக இருந்திருந்தால் சட்டையை பிடிக்கும் ஊழியர்கள் அதிகமாக இருந்தால் திரும்ப கொடுங்கள்}
உழைத்த பணம்
மனிதாபிமானம் சின்ன சின்ன செயல்களிலும் உள்ளது



