சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள்
சிந்தித்து கொண்டிருப்பதாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள்
பாதி சிந்தனை பாதி செயல் என இருப்பவர்கள் இருக்கிறார்கள்
சிந்திப்பதை விட மரணமே பெரியது என்றும் இருக்கிறார்கள்....
சிந்தனை என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் இருக்கிறார்கள்...
எந்த ஒரு செயலுக்கும் சிந்தனை தான் தொடக்கம், எது ஒன்றை திரும்ப திரும்ப செய்கிறோமோ சிந்தனை செய்கிறோமோ,காலப்போக்கில் அந்த செயலை,சிந்தனையை எளிமையாக கையாள முடியும்...
அது வழக்கமாகி விடுகிறது...
நல்ல விதமாக சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள்
கெட்ட விதமாக சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள்...நல்ல விதத்தில் சிந்திப்பது , தலைகீழாக இருந்து தண்ணீர் குடிப்பதை விட கடினமானது.
கடினமானதாக இருந்தாலும் அதை பழக்கமாக ஆக்கி,வழக்கமாக ஆக்கினால் எளிமையாக ஆகி விடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது...

No comments:
Post a Comment