வெயிலின் கோரப்பிடியில் கொஞ்சகாலம் தொடர்ந்து இருந்து வந்த நாம் மழைக்காக ஏங்குவது இயல்பு...அப்படி கொஞ்ச நாள் வெயிலுக்கு பிறகு பருவ காலத்தின் சுழற்சி மழைக்காலத்தை கண் முன் கொண்டுவரும்.
அந்த மழைக்காலத்தில் மண் மட்டும் அல்ல நம் இதயமும் அடி ஆழம் வரை நனையும்.
இந்த மழைக்காலத்தில் காடு கரைக்கு தினசரி சென்று வரும் நாயகர்கள் வெகுவாக இந்த இயற்கையிடம் இருந்து கற்பது ஏராளம்...ரசிப்பதற்கு ஏராளம் என்று தான் சொல்லலாம்..
இயந்திர வாழ்க்கை இந்த தலைமுறைக்கு ஒரு குறுகிய வட்டத்திற்குள் எப்படி வாழ்வது,குறுகிய வட்டத்திற்குள் வாழ்வது தான் மகிழ்ச்சி,அதை தாண்டி ஒன்றும் இல்லை தான் என்று நாளைய தலைமுறைக்கு சொல்லித்தருகிறது..
நம்முடைய வருங்கால தலைமுறை பிள்ளைகள் கற்பனை திறன் அற்றவர்களாக வளருகின்றார்கள் ..
No comments:
Post a Comment