உங்கள் இமைகளை நீங்கள் ஒவ்வொருமுறை சிமிட்டும்போதும் ஒரு பெரிய காரிருள் போன்ற ஒரு மையிருட்டு வந்து போவதை கவனித்திருக்குறீர்களா இரவில் எதேச்சையாக ஒளி இல்லாமல் ஆகும்போது பொறுமையாக ஆடாமல் அசையாமல் அந்த இருளில் உங்கள் இமைகளை திறந்து மூடுங்கள்..
நீங்கள் அதிசயித்துப் போவீர்கள்.இருள் உங்களுக்கு சொல்லித்தரும் பாடம் அதை கூர்ந்து உள்வாங்கினால் தான் தெரியும்.அதை அனுபவித்தாள் நிச்சயம் தெரியும்.
இன்றைய தகவல் தொடர்பு தொழில்நுட்ப காலத்தில், இயந்திற வாழ்க்கைமுறையில் நாம் ஒவ்வொருவரும் எந்த ஒன்றையும் ஒரு வினாடி உற்று கவனிப்பதில்லை.
நம் கண்முன் ஏதாவது ஒரு ஒளி விழுந்து கொண்டே இருக்கும் இரவு உரன்கிய பின் வரும் இருட்டு யாருக்கும் சிந்தையில் இருப்பது கடினம்தான்.
கண் பார்வை இல்லாதவர்களுக்கு இருட்டின் ஆழமும் அழகும் தெரியும்...
No comments:
Post a Comment