Thursday, 28 December 2023

நாகரீக முன்னேற்றம்

 மக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை பணம் கொடுத்து வாங்கி உயிர் பிழைக்கின்றனர் ....


பணம் இல்லாதவர்கள் பணமின்மை என்ற காரணத்தினால் காலப்போக்கில் இறந்து போகின்றனர்...


தங்களுக்கு தேவையான தரமான கல்வியை பணம்கொடுத்து பயில்கின்றனர்..

பணம் இல்லாதவர்கள் பணமின்மை என்ற காரணத்தினால் கல்வியை தொடர முடியவில்லை....


சில மணி நேரம் பசி தாங்கும் மனிதர்கள் சிலபேர் என்றால் பணமின்மை என்ற காரணத்தினால் வாழ்க்கை முழுக்க பசியில் பிறந்து பசியில் இறக்கும் மனிதர்கள் பலர்...


இருளை விரட்ட ஒளியை ஏற்றினாலே போதும்...



Tuesday, 26 December 2023

மன வலி

எந்த ஒரு கவலையும் இல்லாமல் திரியும் இளம்பிராயம் தான் ஒரு பெரிய மன வலிக்கு திருப்புமுனையாக அமையும் என்பது பெரும்பாலும் அப்புறம் தான் தெரிய வரும்..

பள்ளிப்பருவத்தில் நிம்மதியாக இருந்த நியாபகம்...துள்ளித் திரிந்த அந்த நாட்கள் தான் நரகம் என்று அந்த சொர்க்கத்தை இழந்து நிற்கிறோம்...

பழைய நினைவுகள் எவ்வளவு மகிழ்ச்சியை தந்தாலும் அது ஏன் தொடரவில்லை என்று ஒரு கோவம் வருகிறது ..

வாழ்க்கை என்றால் வாழ்வதற்கு தானே ... அப்போ ஏன் நாட்கள் கடினமாக கடக்கிறது...

மீதி நாட்கள் நிம்மதி இல்லாமல் தான் கடக்க வேண்டுமா...

வீட்டில் வீதியில் வேலையில் உறவுகளில் நண்பர்களிடம் பிள்ளையிடம் மனைவியிடம் இப்படி எல்லோரிடமும் சந்தோசம் இருப்பதாய் எத்தனை நாட்கள் நடிக்க...

எதையும்,எந்த சூழ்நிலையையும்,எந்த சவால் களையும் சமாளிக்கும் மனப்பக்குவம் இனி வருவது, என்னில் வளர்வது,வளர்ப்பது எப்போது....

வலியுடன்...

Wednesday, 13 December 2023

வலி ஒருமுறை கொல்லும் நினைவுகள் ஒவ்வொரு முறையும் கொல்லும்

 நாம் நினைத்தது எல்லாம் நினைத்த மாதிரியே நடந்துவிட்டால் இந்த பூவுலகில் கவலை என்பதே வர வாய்ப்பில்லை.

கவலை மனிதனின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்னக் கூடிய புற்றுநோய்..

ஒரு தனி மனிதன் இந்த சமுதாயத்தோடு  நெருங்கிப் பழகி ஒரு உறவை ஏற்படுத்துகிறான்..

குடும்ப உறவினர்கள் தவிர்த்து நண்பன் நண்பி பெரியவன் சிறியவன் சித்திசித்தப்பா மாமா மாமி அத்தை பெரியப்பா பெரியம்மா என்று பலதரப்பட்ட மனிதர்களிடம் சில சில நினைவுகளை ஏற்படுத்திக்கொண்டு நாட்களை கழிக்கிறான்

பெரும்பாலும் முப்பொழுதும் அடுத்தவர்களின் துணையோடு கழிக்கிறார்கள்..

எத்தனை எத்தனை உறவுகள் இருந்தாலும் மனம் விட்டு பேசும் நபர்கள் மிக மிகக் குறைவு...

அதிகபட்ச உரிமை அவனுக்கு அடுத்தவர்கள் சொல்படி நடப்பதுதான்....இல்லையென்றால் அந்த உறவு நீடிப்பது கடினம்...

இப்படி குழந்தை பருவத்தில் இருந்து பழக்கப்பட்டு சிறுவயது முதலே ஒரு நல்ல நினைவு என்றால் பத்து கெட்ட நினைவு என்று இதயத்தில் தங்குகிறது...

நாளடைவில் வரும் பொருளாதார நெருக்கடியும் , தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாததாலும் ஒரு பாரம் ஆட்கொள்கிறது ...

மேற்கொண்டு அவனே அவனை தனிமை படுத்தும் நிகழ்வு...அவன் பாதையில் நடந்த கெட்ட நினைவுகளை நினைத்து நினைத்து நொந்துகொண்டு....வேதனையில் தவிக்கிறான்...

மீண்டு வரலாம்! மீண்டும் வரலாம் 

கவலைப் படும் நேரம் உங்களை செதுக்கலாம்...

தனிமையை சரியாக பயன்படுத்தினால் முன்னேறலாம்....

பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு !



அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...