சிறு துளி பெருவெள்ளம்
மே 30/2022
“தண்ணீரின் அருமை கோடையில் தெரிவது போல” சேமிப்பின் அருமையானது வறுமை வரும் போது நன்றாகவே தெரியும்.
ஒரு மனிதன் வாழ்வில் வெற்றியடைய நல்லறிவுடையவனாகவும் அதே நேரம் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
கல்வியாகட்டும் செல்வமாகட்டும் சிறுக சிறுக சேர்ப்பதனாலேயே முழுமையான மற்றும் நிலையான அடைவினை அடைந்து கொள்ள முடியும்.
உலகத்தின் எல்லா வித வெற்றிகளுக்கும் ஆரம்ப புள்ளி மிக சிறிய முயற்சியாக தான் இருக்கும்.
கண்ணுக்கு தெரியாத சிறிய துகள் விதையில் இருந்து பலநூறு பேர் ஓய்வெடுக்கும் ஒரு ஆலமரம் உருவாகின்றதனை போல
சிறிய தீப்பொறி பெரும் காட்டினையே எரிப்பதனை போல சிறிய ஒரு துளி நீர் தான் காட்டாற்று வெள்ளமாக பேராறுகளாய் பிரவகிக்கின்றன.
இது நமக்கு மிகப்பெரிய உண்மை ஒன்றை உணர்த்துகிறது. நாம் சிறுக சிறுக சேமிப்பதனால் தான் தான் அது எம்மை பெரும் வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்.

No comments:
Post a Comment