அழுத பிள்ளை பால் குடிக்கும்
மே 31/2022
பால் கொடுப்பது பெற்ற தாயின் கடமை.
தாயானவளிடம்,குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்று நினைவூட்ட அவசியமில்லை..
கு
அழாமல் இருந்தால் அதன் பசி தீருமா...?அல்லது அழுகையின் மூலம் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறதா...!!!
"அழுத பிள்ளைக்கு தாய் பால் கொடுப்பாள்" என்று இந்த பழமொழி கூறவில்லை..பிள்ளைக்கு பால் தேவை என்றால் இயற்கையாக கிடைக்காத பட்சத்தில் அழுதாவது அதனைப் பெற்றிட வேண்டும் என குழந்தை நினைக்கிறது,அதற்காக முயற்சிக்கிறது...
அதுபோல
நமது நியாயமான உரிமைகள் நமக்கு கிடைக்காத பட்சத்தில் அதனை கேட்டாவது (அ) போராடியாவது பெற்றிடவேண்டும் என்று இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது....

No comments:
Post a Comment