இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
மே-21/2022
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை..!
ஆற்றின் ஒரு கரையில் மேயும் மாட்டுக்கு அங்குள்ள புல்லை விட ,ஆற்றின் மறுகரையில் உள்ள புல் பச்சை பசேல் எனவும்,அடர்த்தி நிறைந்ததாகவும் காணப்படுமாம்...அங்கே போய் மேய்ந்தால் என்ன என்று தோன்றுமாம்
அங்கேயும் இதே போல தான் உள்ளது என்று,சென்று பார்த்தால் தான் தெரியும் ...
கருத்து : நிம்மதி தேடி அலையும் நாமும் ஒரு இக்கட்டான சூழ்நிலையோ, மனதில் பாரமோ நேரும் பொழுது, சுற்றி இருப்பவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நம் மனதை மேலும் அழுத்தத்துக்கு ஆளாக்குவோம் ...!
"வீட்டுக்கு வீடு வாசற்படி"
நல்ல சிந்தனை நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும்...💕🤗

No comments:
Post a Comment