Sunday, 19 January 2025

சூழ்நிலை கைதி


 வாழ்க்கை என்பது வரம் 

சூரியன் மறைந்த பிறகு சூரிய நமஸ்காரம் செய்யமுடியுமா...?

முடியாது தானே..!


அதே போல தான் வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையும்,அந்தந்த நேரத்தில் வாழ வேண்டும்..

நம்முடைய வாழ்க்கையில் நாம் வெவ்வேறு மனிதர்களை சந்திக்கிறோம்..நாம் சந்திக்கும் மோசமான மனிதர்கள் ,யார் யார் நல்லவர்கள் என்பதை அறிமுகம் செய்கிறார்கள்....


நாம் சந்திக்கும் மோசமான சூழ்நிலைகளால் தான் நாம் நல்ல ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்குகிறோம்


இக்கட்டான சூழ்நிலை வரும்போதெல்லாம் அதை கடந்து வருவது அவ்வளவு எளிதல்ல,ஆனால் அதை நீ கடந்து  வருவது உன்னுடைய பொறுப்பு...

கடந்து வா...

காலம் உனக்கு சொல்லும்... நீ எடுத்த முடிவுகளில் சிறந்த முடிவு இதுதான் என்று...

உன்னுடைய சூழ்நிலைகளை நீ கைது செய்

ஒருபோதும் நீ

சூழ்நிலை கைதியாகிவிடாதே...

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...