மூன்று ஊருக்கு ஒரு ரேஷன் கடை இருக்கிறது அப்படிதான் எங்கள் சிறிய ஊரில் நட்டம் நடுவாக ஒரு ரேஷன் கடை இயங்கி வருகிறது.
ரேஷன் கடையில் பொதுவாக பெண்கள் வரிசை அதிகமாக இருக்கும்
கொஞ்சம் குழந்தைகள் கொஞ்சம் முதியவர்கள் வாய் பேசாமல் வரிசையில் நின்று தனக்கு உரிய சாதனத்தை வாங்கி செல்வார்கள்.
நம்முடைய குடும்ப அட்டையை வாங்கி என்ன என்ன வேண்டும் என்று கேட்டு கைரேகை வைத்து பதிவு செய்து ஒரு துண்டு சீட்டில் எழுதி தருவது ஒரு அதிகாரி.
இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை அடுத்து தான் இங்கு பிரச்சனை
உரிய பொருளை நெருத்து தர ஒரு 50 55 வயது மதிக்கத்தக்க அளவுள்ள ஒரு பெரியவர் இருப்பார் அவருக்கு 50 kg எடையுள்ள சீனிப்பை அரிசிப்பை பருப்புப்பை எல்லாவற்றையும் இழுத்து உதவிசெய்ய ஒருவர் இருப்பார் இந்த உதவியாளர் பெரும்பாலும் அந்த ஊர்க் காரராக இருப்பார் ..மற்ற குறிப்பு எழுதும் அதிகாரியும் எடை போடும் அதிகாரியும் வெளியூர் காரராக இருப்பார்.
எடை நெருக்கும் தராசின் அளவு இப்பொழுதெல்லாம் எலக்ட்ரானிக் சிக்னல்.மிகத்துல்லியமாக காட்டும். பெரும்பாலும் யார் கண்ணிலும படாதவாரு வளைத்து வைத்திருப்பார்.
நம் மக்கள்தான் எந்த கேள்வியும் கேட்பதில்லையே. போடுவதை வாங்கி செல்வது வழக்கம்...
50 கிலோ சீனிப் பையில் 65 கிலோ சீனி இருக்கும் நம்ம எடைகாரர் எடை போடுவதை கவனித்தால்...
Tare என்ற ஒன்றே அந்த தராசில் உண்டு என்று ஒரு பாமர மக்களுக்கும் தெரியாது.ஆள் பார்த்து சாதனம் மக்களின் பைக்குள் செல்லும்..
வீட்டில் சென்று மறு எடை போட்டு பார்த்தால் குறைந்தது கால் கிலோ குறைவாக இருக்கும்.
முள்ளமாரித்தனம் சிறப்பாக வெளிப்படும் நமது எடைபோடும் மனிதர்களிடமிருந்து..பாவம் போல வரிசையில் நிற்கும் முதியவர்கள் குழந்தைகள் போடுவதை வாங்வாங்கிக்கொண்டு அமைதியாக செல்வதை கொஞ்சம் கவனித்தால் முள்ளமாரித்தனம் செய்யும் அயோகியர்களை என்ன சொல்லி திருத்துவது...
யாரை சொல்லி குற்றம் மக்களாகிய நாம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
கேள்விகள் கேட்க வேண்டும்
ஒன்று கூட வேண்டும்
நமது உரிமையை உணர வேண்டும்
நாம் செய்வது தவறு என்று மனது உருத்த வேண்டும்
அரசியல் புரிதல் வேண்டும்
2 கிலோ சீனியா எனக்கு 10 கிராம் கூட அதிகமாக வேண்டாம் உரியதை கொடு என்று தைரியாமக கேட்கும் துணிச்சல் வேண்டும்.
துணிவே துணை...
No comments:
Post a Comment