Friday, 13 October 2023

அழகிய வண்ணத்துப் பூச்சிகள்


 அடர்பச்சை நிறத்தில் ஒரு கறிவேப்பிலை மரம் காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருக்கும் அந்த நேரம் நான் எதேச்சையாக அந்த பக்கம் போகவே கறிவேப்பிலை பூவின் வாசம் மூக்கை சோதித்தது.சரி மூக்கால் வருடியது போதும் கண்ணால் சுவாசிப்போம் என்று பூவை பார்த்தேன்.

அழகிய பூவின் மேலே இளம்பச்சை நிறமா இல்லை, இளம் மஞ்சள் நிறமா என்று ஊகிக்க முடியாத ஒரு  மிருதுவான ஒற்றை வண்ண வண்ணத்துப் பூச்சி மெதுவாக அதன் சிறகை அசைத்து அசைத்து பூக்கு வலிக்காமல் அதன் தேனை உரிந்து கொண்டிருந்தது..அந்த அழகை ரசித்து கொண்டிருக்கும் போதே உயர்ந்த கிளைக்கு அலேக்காக பறந்து போவதை அண்ணாந்து பார்த்தேன் அதே வண்ணத்தில் எக்கச் சக்கமான வண்ணத்துப் பூச்சிகள்....

ஊடாகவே பல வண்ணங்கள் கலந்த வண்ணத்துப் பூசசிகளும் பள்ளியிடம் இருந்து பிரிந்து சென்ற வால் தரையில் எப்படி துடிக்குமோ அதைப்போல இந்த வண்ணத்துப் பூச்சிகள் வானத்தில் துடிப்பதைப் போல வெட்டி வெட்டி பறந்து கொண்டிருந்தது ..

பாலித்தீன் பூக்கள் மணப்பதில்லை

இயந்திர கண்கள் ரசிப்பதில்லை

இறுகிய பாறை உணர்வதில்லை

அமைதியாக புரிந்து கொண்டால் துன்பமில்லை...





No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...