மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு மனிதன் நிகழ்காலம் குறித்து திளைப்புடன் இருப்பான்.
நான் என்னுடைய எதிர்காலத்தை நினைத்து நினைத்து பயந்துகொண்டோ, அல்லது என்னுடைய கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைத்து வருத்தப்பட்டு கொண்டோ இருக்கிறேன் என்றால் என்னுடைய நிகழ்காலம் எப்படி இருக்கும் ...
அது மிகவும் கவலையை எனக்கு தரும்..என்னுடைய இந்த நிமிடம் கவலைப் படுவதற்கும்,பயபடுவதற்கும் மட்டுமே போதுமாக இருக்குமே தவிர,அங்கே எந்தவித நகர்வும் இருக்காது...
ஏற்றுக்கொள்ளுதல்
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் எனக்கு நல்ல அனுபவத்தையும்,இன்ப துன்ப நிகழ்வுகளை சரி சமமாக எடுத்துக்கொள்ளும் மனப் பக்குவத்தையும் எனக்கு தரும்பட்சம் ,இயல்பாக என்னுடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஏற்றுக்கொண்டு ,ஏற்படும் இடர்களை பார்த்து பயப்படாமல் கவலைப்படாமல் தீர்வுகளை பார்த்து நான் நகர தொடங்குகிறேன்....

No comments:
Post a Comment