சிறகிருப்பது பறப்பதற்குத்தானே
எதெற்குகெடுத்தாலும் ஒரு காரணம் தேடி கண்டுபிடிப்பது தான் இன்றைய நவ நாகரீக தொழில் நுட்பம், நமக்கு தந்த பம்பர் பரிசு
எல்லாம் எளிதாகி விட்டது,எனக்கு நடக்கும்வரை
தேடி தேடி கற்றுக்கொள்கிறாய் ,
நீ கெட்டுப்போகும் அனைத்து வழிகளையும்,
அவனுடைய கண்ணீர் இந்த "குடத்தை"நிரப்ப வேண்டும் என்று நீ ஆசைப்பட்டால் , உன்னுடைய கண்ணீர் ஒருநாள் "குளத்தை" நிரப்பும்
கண்முன்னால் சுத்தமான நல்ல நீரும், அசுத்தமான சாக்கடை சகதியும் இருந்தால் எதில் நீராடுவாய்
சந்தேகமே இல்லை ....!!!
மனிதனின் முதல் கண்டுபிடிப்பு சக்கரம் அது அன்றைய புதுமை
ஆனால் இன்று
சக்கரம் இல்லாமல் கூட நகடலாம்
தொழில்நுட்பம் இல்லாமல் நகர்வே இல்லை
தொழிநுட்பம்தான் இன்றைய புதுமை
நான் விட்ட கண்ணீர் யாரையும் பாதிக்கவில்லை என்பது எவ்வளவு வேதனை..
சம்பாதி
பணத்தோடு சேரத்து நல்ல உறவுகளையும் சம்பாதி
உன் கண்ணீரை துடைக்கவும் கூடவே சேர்ந்து கண்ணீர் வடிக்கவும் நல் உறவுகளை சம்பாதித்துக்கொள்
நீரை விட்டு பாலைமட்டும் குடித்துப்பறக்கும் அன்னப் பறவை போல
நீயும் பற
ஆம் நீயும் பற அந்த தொழில்நுட்பம் உன்னைப் பயன்படுத்தாமல் ,நீ அந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் பற..
நீயும் பற
அ. சனநித்

No comments:
Post a Comment