வீங்கியவன் சாவான் தூங்கியவன் வாழ்வான்
நோய் இல்லாத வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வு
உண்ணுவது அமிர்தம் ஆக இருந்தாலும் அளவு கூடாமல் உண்ண வேண்டும் இல்லை எனில் நாம் உண்ணும் அமிரதமே நஞ்சாகி நம் உயிரை பறித்து விடும்.
அளவுக்கு அதிகமாக உண்டு வயிறு பருத்து தொந்தி வீங்கி பருத்து தொங்குவதை தான் வீங்கியவன் என சொல்லப்படுகிறது வயிறு எப்பொழுதும் அடக்கமாக இருப்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் காலப்போக்கில் நோய்கள் அதிகமாக உருவெடுக்கலாம்
உணவை மருந்து எனவே நல்ல உணவை தேடி உண்ணுங்கள் உடலுக்கு தேவையான உணவை உடல் சீதோஷன நிலைக்கு உகந்த உணவை உண்ணுதல் மிக நல்லது
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்
எனவே உங்கள் உடலை நீங்கள் தான் கவனிக்க வேண்டும்
சத்தான உணவை உண்ணுங்கள்
No comments:
Post a Comment